33 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

சிலாங்கூர் மாநில உணவு வங்கி திட்டத்தின் கீழ் போர்ட் கிள்ளானைச் சேர்ந்த 1,580 குடும்பங்களுக்கு உதவி!

பரிவுமிக்க சிலாங்கூர் சமூக நலச் சங்கத்தின் தலைவர் டாக்டர் அந்தோணி மற்றும் சிலாங்கூர் மாநில உணவு வங்கி திட்டத்தின் கீழ் போர்ட் கிள்ளானில் உள்ள 1,580 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தலைமையில் பரிவுமிக்க சிலாங்கூர் சமூக நல சங்கம் வசதி குறைந்த மக்களை தேடிச்சென்று உணவு கூடைகளை வழங்கி உதவி புரிந்து இருப்பதாக முன்னாள் கிராமத் தலைவருமான டாக்டர் அந்தோனி தெரிவித்தார்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்த உதவிகளை வழங்கி இருக்கிறோம்.
இங்குள்ள மக்கள் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்திருக்கிறார்கள்.


மாநில அரசாங்கத்தின் முயற்சியுடன், அதன் துணை நிறுவனமான பிங்கிஸ்கன் மெஸ்ரா உணவுக் கூடைகள் வழங்கும் விழாவை ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்ஷியா இஸ்மாயில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles