
வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் பினாங்கு மாநிலத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் மிகப்பெரிய அளவில் கோவிட் மருத்துவ பரிசோதனை தொடங்கப்படுவதாக முதலமைச்சர் சாவ் கூன் இயோ தெரிவித்தார்.
சுங்கை பினாங், பாடாங் கோத்தா, டத்தோ கிராமாட் மற்றும் பூலாவ் திக்கூஸ் ஆகிய சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இலவச மருத்துவ பரிசோதனையில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
பினாங்கு மாநிலத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலங்களிலும் இலவச பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கான செலவுகளை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் என்றார் அவர்.
