
குடிநுழைவு துறையினர் நேற்று மேற்கொண்ட அதிரடி சோதனையில் காப்பார் மேரு வட்டாரத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்த 229 வெளிநாட்டு தொழிலாளர்களை கைது செய்தனர்.
முறையான ஆவணங்கள் இல்லாததால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவு துறையின் தலைமை இயக்குனர் டத்தோ கைருல் தெரிவித்தார்.
இதில் 99 இந்திய பிரஜைகளும் அடங்குவார்கள்.
ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய அந்த தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் துறை 20,000 வெள்ளி அபராதமும் sop விதிமுறைகளை மீறியதற்காக போலீசார் 10,000 வெள்ளி அபராதமும் விதித்துள்ளனர்.
