30.7 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

மூன்று மாதங்களில் 336 தற்கொலை சம்பவங்கள்!

இவ்வாண்டில் முதல் மூன்று மாதங்களில் மலேசியாவில் 336 பேர் தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.
தினசரி நான்கு தற்கொலைச் சம்பவங்கள் இதில் அடங்குவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் காதர் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
எம் சி ஓ காலக்கட்டத்தில் தற்கொலைகளை தடுப்பதற்கு அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும்..
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை 77,500 பேர் வேலை பிரச்சினை எதிர்நோக்கியுள்ளனர்.
வேலையின்மை மற்றும் கடன் சுமை போன்ற பிரச்சினைகளால் மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் தற்கொலை சம்பவங்களை தடுப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles