
நோய்த் தொற்றினால் வேலையை இழந்து பரிதவிக்கும் குடும்பங்கள் தங்கள் இல்லங்களில் வெள்ளைக் கொடிகளை ஏற்றி வைத்துள்ளனர்.
நீலாய், மந்தின் மற்றும் பாஜாம் பகுதியைச் சேர்ந்த 11 குடும்பங்கள் தங்கள் வீட்டின் முன் வெள்ளைக் கொடிகளை ஏற்றி வைத்து இருந்தனர்.
நெகிரி மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அருள் குமார் உடனடியாக களத்தில் இறங்கி 11 குடும்பங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கினார்.
இவரின் தலைமையில் இளைஞர் அணி மின்னல் வேகத்தில் செயல்பட்டு அனைத்து குடும்பங்களுக்கும் உணவு பொருட்களை வழங்கி உதவி புரிந்தது பாராட்டுக்குரியது.

