
இன்று ஜுலை 2ஆஆம் தேதி முதல் மெர்டேக்கா தேதி வரை கோலாலம்பூரில்
கார் நிறுத்துமிடங்களில் வாகனங்களுக்கு எவ்வித கட்டணமும் கிடையாது என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.
நோய்தொற்று தாக்கத்தினால் மக்களின் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு Free Parking வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இரு மாதங்களுக்கு, மாநகர் மன்றத்திற்குச் சொந்தமான கார் நிறுத்தும் இடங்களில் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என்று அவர் கூறினார்.
