
Emco உத்தரவை முன்னிட்டு கம்போங் பாரு ஸ்தாப்பாக் ஆயர் பனாஸ் பிபிஆர் குடியிருப்பு பகுதிகளில் படிக்கட்டுகளில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி கம்பிகளை தீயணைப்பு படை வீரர்கள் இன்று அகற்றினர்.
தங்கள் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் நாங்கள் எப்படி தப்பித்து செல்வது என்று குடியிருப்பார்கள் தெரிவித்த கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் முள்வேலி கம்பிகள் அகற்றப்பட்டன.
இந்த கம்பிகளை அகற்றும்படி தீயணைப்பு படை வீரர்களுக்கு அதன் தலைமை இயக்குனர் ஹம்டான் உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து மாடிப்பகுதிகளில் அமைக்கப்பட்ட முள்வெளி கம்பிகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன.



