
தேசிய மீட்சித் திட்டத்திற்கான முதல் கட்ட அமலாக்க எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 213 தொழிற்சாலைகள் மற்றும் வணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 19,000 தொழிற்சாலைகள் மற்றும் வணிக மையங்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுன் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கையில் அரச மலேசிய போலீஸ் படையின் தலைமையில் பல்வேறு அமலாக்க நிறுவனங்களைச் சேர்ந்த 26,504 அதிகாரிகள் பங்கேற்றதாக அவர் சொன்னார்.
