
அமெரிக்க அரசாங்கம் வழங்கிய 10 லட்சம் பைசர் தடுப்பூசிகள் இன்று சுபாங் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தது.
இந்த தடுப்பூசிகளை ஏற்றிவந்த ராஜா ஏர்வேஸ் விமானம் இன்று காலை எட்டு பத்து மணிக்கு சுபாங் விமான நிலையம் வந்து இறங்கியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஷாமுடின் தெரிவித்தார்.
மலேசியாவுக்கு தொடர்ந்து அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
