
Emco அமுலில் இருக்கும் பகுதிகளில் இபிஎப் கிளைகள் மற்றும் வாடிக்கையாளர் முகப்பிடங்கள் தற்காலிமாக மூடப்படுகிறது.
சிலாங்கூர் மாநிலத்தில் ரவாங், ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, பூச்சோங், கிள்ளான், காஜாங் மற்றும் கோம்பாக் ஆகிய இடங்களிலும் பகாங்கில் குவாந்தான், ஜெராண்டூட், பெக்கான் ஆகிய நகரங்களிலும் உள்ள அலுவலகங்கள் மூடப்படுகின்றன.
அரசாங்கம் அறிவித்துள்ள கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக இ.பி.எஃப். அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
