
நோய்த்தொற்றினால் வருமானம் இழந்து கஷ்டப்படும் மக்கள் தற்போது உணவுக்காக தங்களது வீடுகளில் வெள்ளைக் கொடிகளை ஏற்றி வைத்துள்ளனர் .
அந்த வகையில் லெம்பா பந்தாய் செம்பாக்கா பிபிஆர் குடியிருப்பில் வெள்ளைக் கொடிகளை ஏற்றி வைத்த 10 குடும்பங்களுக்கு உடனடியாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் ஓமார் தெரிவித்தார்.
உதவி தேவைப்படுவோர் நேரடியாக போலீஸ் நிலைகளை தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
