
பகாங் மாநிலத்தில் ரவூப்பில் 100 ஹெக்டர் நிலப்பரப்பில் முசா கிங் டூரியான் தோட்டத்தை அழிக்கும் பணியில் பகாங் காட்டு இலாகா அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்த டுரியான் தோட்டங்களை அழிக்க அதிகாரிகள் முற்பட்டபோது டூரியான் தோட்டக்காரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
கைது செய்யப்பட்ட 18 டூரியான் தோட்டக்காரர்கள் நேற்று ராவூப் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டனர். இவர்களை தடுத்து வைக்க அனுமதி கோர போலீசார் முயற்சிகளை மேற்கொண்டபோது போலீங அதிகாரிகள் பணிகளுக்கு இடையூறாக சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ இருந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர் மீத இரண்டு விசாரணை கோப்புகள் திறக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



