
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீன் மற்றும் காய்கறிகளை திருடுவது வேதனை அளிப்பதாக மைடீன் பேரங்காடி தலைமை இயக்குனர் அமீர் அலி மைடின் தெரிவித்தார்.
முன்பு பேரங்காடி களுக்கு வரும் மக்கள் தொலைக்காட்சிகளை திருடுவார்கள்.
இப்போது நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீன் மற்றும் காய்கறிகளை திருடுவது பெரும் வேதனை அளிப்பதாக அவர் சொன்னார்.
மைடீன் பேரங்காடிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது அதிகரித்துள்ளது.
இவர்கள் விலை உயர்ந்த பொருட்களை திருடுவதில்லை. உணவுக்காக மீன் மற்றும் காய்கறிகளை திருடுவது பார்க்கையில் பெரும் வேதனை அளிப்பதாக அவர் இன்று தெரிவித்தார்.
