
தற்போது நாட்டில் தினசரி மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கு நிறைவேறி இருப்பதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார்
நாட்டில் தற்போது 313,761 பேருக்கு தடுப்பூசி போடப்படும் இலக்கை நாம் அடைந்திருக்கிறோம்.
மேலும் இதுவரை நாட்டில் 65 லட்சத்து 85,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
27 லட்சத்து 35,000 பேருக்கு 2 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
நாட்டில் தடுப்பூசி போடும் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் சுகாதார அமைச்சு. தடுப்பூசி பணிக்குழு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
