
நோய் தொற்று தாக்கம் அதிகமாக இருப்பதால் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சிரம்பான் உட்பட எட்டு இடங்களில் கடுமையான மக்கள் நடமாட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 9-ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமல்படுத்தப் படுவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
சிரம்பான், லாபு, ரந்தாவ், லெங்கெங், பந்தாய், ராசா, அம்பாங்கான், செதூள் ஆகிய இடங்களில் கடுமையான மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் சொன்னார்.



