
பெரிகாத்தான் நேசனல் அரசாங்கத்தில் இருந்து அம்னோ அமைச்சர்கள் முதலில் பதவி விலக சொல்லுங்கள் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்கு பதிலாக முதலில் அமைச்சரவையில் இருந்து அம்னோ உறுப்பினர்கள் பதவி விலகட்டும்.
அரசாங்கத்திலிருந்து எந்தவொரு அமைச்சர்களும் பதவி விலகுவது இல்லை என்று இணக்கம் காணப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பிரதமர் பதவியில் இருந்து விலகும் படி அம்னோவின் நெருக்குதல் வெற்றி பெறாது என்று அவர் சொன்னார்.



