
சிலாங்கூர் மாநிலத்தில் Emco அமுலில் இருக்கும் பகுதிகளில் பணிபுரியும் தொழிற்சாலை ஊழியர்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை கோவிட் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனையில் நோய்தொற்று தாக்கம் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட ஊழியர்கள் மட்டுமே வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
கோவிட் மருத்துவ பரிசோதனை செலவுகளை அதன் தொழிற்சாலை நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அனைத்துலக வாணிப தொழில் துறை அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது..



