
நாட்டில் முதலாளிகளுக்கு எதிராக மே 3ஆம் தேதி முதல் நேற்றுவரை 5,1 77 புகார்கள் கிடைக்க பட்டிருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.
சரவணன் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் போடாதது, சம்பளத்தை தாமதமாக செலுத்துவது, சம்பளக் குறைப்பு, முன் அறிவிப்பின்றி வேலையில் நீக்கியது, கூடுதல் நேர வேலைக்கு ஊதியம் கொடுக்க மறுப்பது, வருடாந்திர விடுமுறையை ரத்து செய்தது ஆகியவை இந்த புகார்களில் இடம்பெற்றிருப்பதாக அவர் சொன்னார்.



