
வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை சிலாங்கூர் மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 23-ஆம் தேதி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா சட்டமன்ற கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார்.
இதற்கான ஒப்புதல் கடிதத்தை சிலாங்கூர் சுல்தானிடம் இருந்து பெற்று இருப்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.



