
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் தலைவர்களும் பொது இயக்கங்களும் உதவி வரும் வேலையில் இப்போது ஆலயங்களும் உதவும் பணியில் களம் இறங்கியுள்ளன.
அந்த வகையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மாநிலத்தில் பக்தர்களுக்கு மிகவும் பிரபலமான முனீஸ்வரர் ஆலயம் ஏழை மக்களுக்கு உதவி வருகிறது.
ஜாலான் கம்பின் ஐந்தாவது மைலில் வீற்றிருக்கும் இந்த முனீஸ்வரர் ஆலயம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை பணத்தை கொண்டு ஏழை மக்களுக்கு உதவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



