
மலாக்கா மேம்பாலச் சாலையில்
‘கொலைகார அரசாங்கம்’ என்ற வாசகம் கொண்ட மனிதப் பொம்மை ஒன்று நேற்று மலாக்கா மேம்பாலச் சாலையில் கண்டெடுக்கப்பட்டது.
அந்தப் பொம்மையை, ஜாலான் துன் அப்துல் ரசாக் – ஆயேர் குரோ மேம்பாலச் சாலையில் பொதுமக்கள் பார்த்தனர்.
அரசாங்க நிர்வாகக் கட்டடமான ஶ்ரீ நெகிரி-க்கு அருகில் இந்த பொம்மை காணப்பட்டதாக ஓரியண்டல் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தப் பொம்மையில் ‘கொலைகார அரசாங்கம்’ என்றச் சொல் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது.
