
தடுப்பூசித் திட்டத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலத்தில் ஜூலை 8ஆம் தேதி வரை 17 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் சொந்த தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கடந்த சனிக்கிழமை வரை 44,233 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
பொதுமக்களுக்கான தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 11,393 பேரும் தொழில் துறையினருக்கான திட்டத்தின் கீழ் 32,840 பேரும் தடுப்பூசி பெற்றுள்ளனர் என்றார் அவர்.



