
ஷா ஆலமில் உள்ள ஐடியல் கன்வென்சன் சென்டரில் தடுப்பூசி மையத்தைச் சேர்ந்த 204 முன்கள பணியாளர்களுக்கு நோய்த்தொற்று கண்டிருப்பதாக தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
இந்த மையத்தில் தொண்டுழிய ஊழியர் ஒருவருக்கு நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 453 முன்கள பணியாளர்களிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 204 முன் களப் பணியாளர்களுக்கு நோய்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
