
சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் உட்பட கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு இரும்பு லட்சம் தடுப்பூசிகள் வினியோகிக்கப்படும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார்.
வரும் ஆகஸ்டு மாத தொடக்கத்தில் இந்த தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும்.
நோய்த் தொற்று தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.இதனிடையே பரிசோதனைக்காக வரும் நோயாளிகள் எதிர்நோக்கும் சுவாசப் பிரச்னையை கருத்தில் கொண்டு தடுப்பூசி மையங்களில் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
