
நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டதால் பிரதமரும் அமைச்சர்களும் வரும் வெள்ளிக்கிழமை தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சார்பற்ற இயக்கங்கள் இன்று அரண்மனையில் மகஜரை சமர்ப்பித்தன. நோய்த் தொற்றினால் குடும்ப உறுப்பினர்களை இழந்த மலேசியர்கள் வெள்ளை உடை அணிந்த வண்ணம் வெள்ளைக் கொடிகளை பறக்க விடும்படி அந்த இயக்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
