
சட்டவிரோதமாக பணத்தை வட்டிக்கு விட்டு வந்த 24 கும்பலைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் முகமட் சுகாய்லி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 20 பேரில் டத்தோஸ்ரீ அந்தஸ்து கொண்ட ஆடவரும் அடங்குவார். இந்த கும்பலிடம் இருந்து 11 ஆடம்பர கார்கள், 36 கைத்தொலைபேசிகள், 64 வங்கி கார்டுகள், 24, 520 வெள்ளி, 9 கைக்கடிகாரங்கள் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.



