
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஆதரவோடு மாநிலத்திலுள்ள இந்து கோயில்கள் அட்சயப் பாத்திரம் திட்டத்தின்கீழ் ஏழை மக்களுக்கு உதவி வருகிறது.
அந்த வகையில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆர்ஆர்ஜ வன துர்க்கை அம்மன் அம்மன் ஆலயம் 20 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கியது.
சுபாங் யூ5 இடத்தில் உள்ள முனீஸ்வரர் ஆலயம் 30 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கியுள்ளது. இதனிடையே கோத்தா டமான்சாரா கிராமத் தலைவர் மகாதேவி தனது கிராமத் தலைவர் நிதியிலிருந்து 90 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கி உதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



