
சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த் தொற்று அதிகம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தளை சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா மேற்கொள்ளவுள்ளது.
Emco கடுமையாக்கப்பட்ட மக்கள் நடமாட்ட உத்தரவு அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய்த் தொற்று அதிகம் உள்ள இடங்களில் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி பெறுவதை உறுதி செய்ய சிறந்த வழி என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
Emco பகுதிகளில் வசிப்போருக்கு மட்டுமின்றி நோய்த் தொற்று அதிகம் காணப்படும் பகுதிகளிலும் இத்தகைய தடுப்பூசி இயக்கத்தை மாநில சுகாதார இலாகா மேற்கொண்டு வருகிறது என்று அவர் சொன்னார்.
