
கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் நேற்று முன்தினம் கருப்புக்கொடி மற்றும் வெள்ளை துணிகள் போர்த்தப்பட்ட பொம்மை சடலங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று சமூக போராட்ட வாதிகளுக்கு தலா இரண்டாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
மூவருக்கு தலா இரண்டாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் நாட்டில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்க 20 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
