
வரும் பொதுத் தேர்தலில் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதியில் அம்னோ சார்பில் உள்ளூர் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்.
இந்தத் தொகுதியில் வெற்றி வேட்பாளர் போட்டியிட்டாலும் களத்தில் இறங்குவேன் என்று கூட்டரசு பிரதேச முன்னாள் அமைச்சரான டத்தோ ராஜா நோங் சிக் தெரிவித்தார்.
அம்னோ சார்பில் இளையவர்கள் போட்டியிட வேண்டும். நானும் அவர்களுக்கு வழிபடுகிறேன்.
ஆனால் வெளி வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நானும் போட்டியிடுவேன் என்று அவர் எச்சரித்தார்.
2013 மற்றும் 2018 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்ட இவர் கெஅடிலான் கட்சியை சேர்ந்த நூருல் இசா அன்வார், முகமட் பாமி அகியோரிடம் தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



