
முகக்கவசம் அணியாத ஆடவர் ஒருவர் கண்டபடி திட்டும் சம்பவம் தொடர்பில் போலீசார் சம்பந்தப்பட்ட ஆடவரை கைது செய்துள்ளனர். கோலாலம்பூர் டேசா பக்தியில் நாசிக் லெமாக் அங்காடி கடையில் முகக்கவசம் அணியாத அந்த ஆடவர் மற்றவர்களை நோக்கி கடுமையாக திட்டுகிறார்.
29 வினாடிகள் கொண்ட இந்த காணொளி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அந்த ஆடவரை போலீசார் கைது செய்து விசாரணையை நடத்தி வருவதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் ஓமார் தெரிவித்தார்
