
நாட்டில் ஏற்பட்டிருக்கும் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் அடுத்த ஆண்டில் சரவா மாநில சட்டமன்ற தேர்தலை நடத்தும்படி சரவா ஜசெக தலைமைச் செயலாளர் எலேன் லிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது நோய்தொற்று குறைந்தபாடில்லை. குறிப்பாக சரவா மாநிலத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது.
சரவா மாநிலத்தில் நேற்று 351 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நோய்த்தொற்று சம்பவம் 200ஆக குறையும்போது சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்றார் அவர்.
