
பெர்சத்து கட்சியின்
11லட்சத்து 20,000 வெள்ளியை தவறாக பயன்படுத்தியதாக தனக்கு எதிராக கொண்டு வரப்பட்டு இருக்கும் இரண்டு குற்றச்சாட்டுகளை மறுத்து
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் விசாரணை கோரியிருக்கிறார்.
மேலும் இவருக்கு
3 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி ஜாமின் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது உத்தரவாத தொகையாக 80,000 வெள்ளியை செலுத்தி இருக்கும் இவர் அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் 2 லட்சத்து 50,000 வெள்ளியை செலுத்த வேண்டும்.
இந்நிலையில் ஜாமின் தொகையை செலுத்த சைட் சாடிக் பொதுமக்களிடம் நிதி திரட்டும் இயக்கத்தை மேற்கொண்டார்.
இந்த இயக்கம் தொடங்கப்பட்டு 24 மணி நேரத்தில் ஏழு லட்சம் வெள்ளி திரண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
24 மணி நேரத்தில் 7 லட்சம் வெள்ளியை வழங்கி உதவி புரிந்த மலேசியர்களுக்கு அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த வழக்கில்
சைட் சாடிக் சார்பில் பிரபல வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ ஆஜராகியுள்ளார்.
