
நாடாளுமன்ற துணை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரஷிட் sop விதிமுறைகளை மீறி உணவு அருந்திய சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இவர் பத்து பஹாட்டில் இரு பெண்களுடன் உணவு அருந்தும் படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் இவருக்கு எதிராக போலீஸ் புகாரும் செய்யப்பட்டிருப்பதால் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் டோலா தெரிவித்தார்.



