
நோய்த்தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு உதவ அரிமா எனப்படும் மலேசிய இந்திய சமூக நல மறுமலர்ச்சி இயக்கமும் களத்தில் இறங்கியது.
கூட்டரசு பிரதேச மாநிலத் தலைவர் ஜேம்ஸ் செல்வராஜா தலைமையில் பண்டார் பாரு செந்தூல் கிளைத் தலைவரும் மலேசியா முன்னாள் நெடுத்தூர ஓட்டக்காரருமான ராஜூ ஏற்பாட்டில் 20 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன. பண்டார் பாரு செந்தூல் காளியம்மன் ஆலய நிர்வாகமும் இதற்கு உதவிக்கரம் நீட்டியது.
ஆலய வளாகத்தில் வசதி குறைந்த மக்களுக்கு நேரடியாக உணவு கூடைகளை ஜேம்ஸ் செல்வராஜா ராஜ் ஆகியோர் எடுத்து வழங்கினார்.



