
குடும்ப மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா ஹருண் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு 13 கோடி வெள்ளி கடனை எப்படி அடைந்தார் என்பதை எஸ்பிஆர்எம் விளக்க வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் நாடாளமன்ற உறுப்பினர்கள் கேள்வியை முன் வைத்துள்ளனர்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சிவராசா, பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சலாவுதீன் அடோப், குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர் அமீருடன் ஹம்சா, கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் மற்றும் கோத்தா பெளுட் நாடாளுமன்ற உறுப்பினர் முனிரா ஆகியோர் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
ரீனா ஹைருணுக்கு மாதச் சம்பளம் 34 ஆயிரம் வெள்ளி. இவரின் சொத்து மதிப்பு 10 லட்சம் வெள்ளி ஆகும்.
அப்படி இருக்கையில் இந்த 13 லட்சம் வெள்ளி கடனை இவரால் எப்படி அடைக்க முடிந்தது என்பதை sprm விளக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
