25.3 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

காரில் கருப்புக்கொடி ஏந்தி அணிவகுப்பு! 20 பேரிடம் போலீசார் விசாரணை

நேற்று நாடு முழுவதும் பல இடங்களில் காரில் கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.
கோலாலம்பூர்,மலாக்கா ஜோகூர், பேராக் மற்றும் பகாங் ஆகிய இடங்களிலும் இந்த கருப்பு கொடி ஊர்வலம் அணிவகுப்பாக நடைபெற்றது.
இந்த கருப்புக் கொடி ஊர்வலத்தை போலீஸ்கார் தடுத்து நிறுத்தியதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நாங்கள் அதிகளவில் ஒரு இடத்தில் ஒன்று கூடாமல் கார் மூலம் இந்த கருப்புக் கொடி ஊர்வலத்தை நடத்தினோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த கருப்புக் கொடி ஊர்வலம் தொடர்பில் 20 பேர் விசாரணைக்காக போலீசார் அழைத்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
தோல்வி கண்ட அரசாங்கம் என்ற பெயரில் நாடு முழுவதும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles