
அடுத்த பிரதமர் யார் என்று ஆசியா செய்தி தமிழ் (ஏஎஸ்டி) செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
கடந்த ஒரு வாரம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 952 பேர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

டத்தோஸ்ரீ இஷாமுடின் 36 வாக்குகளும் துணை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் 25 வாக்குகளும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் 20 வாக்குகளும் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி 14 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
மொத்தம் ஆயிரத்து 47 பேர் இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்று வாக்களித்துள்ள வேலையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்று மலேசியர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
