
மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இடங்களில் பிறந்தநாள் உபசரிப்பு, திருமணம், நிச்சயதார்த்தம் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முடி திருத்தும் நிலையம், மூக்குக் கண்ணாடி விற்பனை கடை சலவை கடை ஆகியவை காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. உணவகங்கள் காலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அனுமதி. இருப்பினும் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்று அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சு அறிவித்துள்ளது.

கார் இருக்கையை கொண்டு ஒரு காரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முடி திருத்தும் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கிய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தலைவர் மகேந்திரன் வெள்ளைச்சாமி தெரிவித்தார்.
