
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி ஒப்பந்த மருத்துவர்கள் நாடு தழுவிய அளவில் நேற்று அமைதி மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விடுக்கப்பட்ட மிரட்டல்களை மீறி ஒப்பந்த மருத்துவர்கள் துணிச்சலாக இந்த மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த மருத்துவர்கள் மீது அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கியூபெக்ஸ் எனப்படும் அரசாங்க பொதுச்சேவை ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒப்பந்த மருத்துவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும்.
இவர்களின் பிரச்சினைகளை அரசாங்கம் கேட்டறிய வேண்டும். ஆகவே மறியலில் ஈடுபட்ட இவர்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்கக் கூடாது என்று கியூபேக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது



