
அமைதியான முறையில் அவசரகால உத்தரவை ரத்து செய்திருக்கும் முடிவானது பெரிக்காத்தான நேஷனல் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து விட்டதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சுட்டிக்காட்டினார்..
பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் தோல்வி கண்டுவிட்டது.
மேலும் இந்த அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் அவசரகால உத்தரவை அமைதியான முறையில் ரத்து செய்துவிட்டது என்று அவர் சாடினார்.
அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை குறிப்பாக தவளைகளை வாங்க முடியவில்லை.
இதனால் பெரும்பான்மையை இழந்து விட்ட அரசாங்கம் அமைதியாக அவசரகால உத்தரவை ரத்து செய்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தங்களை காப்பாற்றிக்கொள்ள பெரிக்கத்தான் நேஷனல் பக்கம் தாவிய தவளைகள் இப்போது மீண்டும் வேறு பக்கம் தாவுதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
