29.4 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

மொகிதீன் யாசினுக்கு ஆதரவை மீட்டுக் கொண்டதில் அம்னோ உறுதியுடன் இருக்கிறது

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி அண்மையில் அறிவித்தார்.
ஆகஸ்டு 1ஆம் தேதிக்கு பிறகு அவசரகால உத்தரவு தொடராது என்று அரசாங்கம் அறிவித்தாலும் அம்னோ எடுத்த முடிவில் உறுதியுடன் இருப்பதாக டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடியை மேற்கொள் காட்டி உத்துசான் செய்தியை வெளியிட்டுள்ளது.
அவசரகால உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பில் மாமன்னரிடம் ஆலோசனை பெறப்பட்டதா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
இது தொடர்பில் அம்னோ உச்சமன்றக் மிக விரைவில் இணையம்வழி கூட்டத்தை நடத்தி முடிவு
எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles