
தோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் மலேசிய ஜோடி இன்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இன்று காலையில் நடந்த பரபரப்பான கால் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் ஏரென் சியா – வூய் யிக் ஜோடி 21-14, 21 -17 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவின் கெவின் – மார்கெஸ் ஜோடியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
உலக பேட்மின்டன் இரட்டையர் தரவரிசையில் இரட்டையர் பிரிவில் இந்தோனேசியா ஜோடி முதலிடத்தில் உள்ளது.
இந்த ஜோடியை வீழ்த்தி மலேசியர்கள் அரையிறுதி சுற்றுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
