
நோய்த்தொற்று கண்டவர்களை மதிப்பீடு செய்யும் மையம் கிள்ளான் தாமான் ஸ்ரீ அண்டலாஸ் விளையாட்டு மையத்தில் செயல்பட்டு வந்தது.
இந்த மையம் நாளை முதல் போர்ட் கிள்ளான் பல்நோக்கு மண்டபத்திற்கு மாற்றப்படுகிறது.
தாமான் ஸ்ரீ அண்டலாஸ் விளையாட்டு மையத்தில் ஜூலை 12ஆம் தேதி இந்த மையம் திறக்கப்பட்டது. வரும் டிசம்பர் மாதம் வரை இந்த மையம் இங்கே செயல்பட திட்டமிட்டபட்டது ஆனால் இங்குள்ள மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
