
மாட்சிமை தங்கிய மாமன்னரை இந்த அரசாங்கம் மதிக்க வில்லை என்பதால் அரண்மனை விவகாரத்தில் அம்னோ எம்பிக்கள் விலகி நிற்க வேண்டுமென அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தின் நடவடிக்கை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது மேலும் நாடாளுமன்றத்திலும் உண்மையாக இருக்கவில்லை. ஆகவே அரண்மனை மற்றும் அரசாங்க இடையே ஏற்பட்டுள்ள நெருக்கடியில் அம்னோ எம்பிக்கள் விலகி இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
அம்னோ எம்பிக்கள் அனைவரும் கட்சி எடுக்கும் முடிவுக்கும் கட்டுப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
