
வரும் பொதுத் தேர்தலில் அம்னோ தனது பாரம்பரிய தொகுதிகளில் போட்டியிட்டால் பெர்சத்து தோல்வி காணும் என்று முன்னாள் பிரதமர் துன் டாகடர் மகாதீர் முகமது சுட்டிக் காட்டியுள்ளார.
அம்னோ தனது பாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுக்காது என்று இதற்கு முன்னர் அம்னோ தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசன் கூறியிருந்ததை மகாதீர் சுட்டிக்காட்டினார். அம்னோ அனைத்து தொகுதிகளிலும் கண்டிப்பாக போட்டியிடும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பெர்சத்து கட்சிக்கே தோல்வி காத்திருக்கிறது என்று மகாதீர் எச்சரித்தார்.
