
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது உண்மை என்றால் அதை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க என்ன தயக்கம் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேள்வி எழுப்பினார்.
பெரும்பான்மை இருக்கிறது என்று கூறிக்கொள்வதில் அர்த்தம் இல்லை.
அதை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
பிரதமருக்கு போதுமான எம்பிக்கள் ஆதரவு இருப்பதாக சிலர் தொடர்ந்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியானால் இதை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் நிரூபிக்க வேண்டும் அதை விடுத்து நாடாளுமன்றத்தில் கோவிட் தோற்று பரவல் என்று கூறி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் ஓடுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
