
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருப்பது விவாதத்திற்கும்,கேள்விகளுக்கும் பதில் கூறவும் முடியாத பயம் என மூவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷேட் சாடிக் சாடினார்.
வழங்கப்பட்ட பொறுப்பிலிருந்து எவ்வளவு நாளைக்கு ஓடி ஒளிந்துக் கொண்டிருப்பீர்கள் என அவர் கேள்வி எழுப்பினார். அரசியலமைப்பு சட்ட விதிகளின் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை கண்டிப்பாக கையாள வேண்டும்.தைரியத்துடன் முன் வந்து அதற்கு தீர்வு காணுங்கள்.
எதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன் கூட்டியே தடுப்பூசி போடப்பட்டது. நாடாளுமன்றம் என்பது தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் அரசியல் ஆயுதமல்ல என அவர் சாடினார். இதுபோன்ற அடாவடிச் செயலை கைவிடுங்கள் எனவும் ஜனநாயகத்தை சாகடிக்காதீர்கள் என்றும் அரசாங்கத்திற்கு மூடா கட்சியின்
தலைவருமான ஷேட் சாடிக் அப்துல் ரஹ்மான் நினைவுறுத்தினார்.
