
பினாங்கு மாநிலம் உட்பட வடபகுதி மாநிலங்களிலும் வர்த்தகத்தில்
சிறப்பாக பீடுநடைப் போட்டு வரும் லஹாரி மெலிபேரா குழுமத்தின்
ஏற்பாட்டில் வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு உணவுக்கு கூடைகள்
வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் தொடங்கப்பட்ட இந்த உதவி திட்டம் முதல் கட்டமாக பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிட் -19 தொற்று காலத்தில் வேலையும்,வருமானமுமின்றி மக்கள் எதிநோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த அரியச் சேவையை செய்து வருவதாக லஹாரி குழுமத்தின் நிர்வாக இயக்குனரும்,தொழிலதிபருமான ஹரிவின் இராமதாஸ் தெரிவித்தார்.
நேற்று ஜூரு வட்டாரத்தில் 150 குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
