
கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கும் படி மருத்துவமனை நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
கோவிட்-19 நோயாளிகளை சமாளிப்பதற்கு உதவும்படி பொது மக்களுக்கு கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜூல்கர்னாய்ன் முகமது ராவி கேட்டுக் கொண்டார்.
மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் முன்களப் பணியாளர்களின் சுமையைக் குறைப்பதற்கு பொதுமக்களின் உதவி தங்களுக்கு தேவைப்படுகிறது.
பொதுமக்களிடமிருந்து நன்கொடை கிடைக்காவிட்டால் கோவிட்-19 நோயாளிகளின் தேவைகளை கவனிக்க முடியாத சூழல் ஏற்படும் என்று அவர் கூறினார்.
